| |
தூய்மை
தூய்மை என்பது
வாய் தாவாரத்தில் தூறும்
உமிழ் நீரிலே இல்லை
அடிமனதில் ஊறும்
எண்ண அருவியில் உள்ளது
- THUBEESH
|
| |
|
| |
தெரிவு
நல்லவர்களோடு
பழகவேண்டுமானால்
கெட்டவர்களோடு
பழகிப்பார்
அப்போதுதான்
நல்லவர்கள்
யாரென்றறிந்து
பழகலாம்
- THUBEESH
|
| |
|
| |
பேரலை
மனிதனுக்குத்
தாகம்
வந்தால்
நீரைக்
குடிக்கின்றான்
அதேபோல்
நீருக்குத்
தாகம்
வந்ததால்
மனிதனைக்
குடிக்கிறதோ
- THUBEESH
|
| |
|
| |
அருமை
தாகம்
இருக்கும் போது
மனிதனிற்கு
ஒரு செம்பு
தண்ணீர்
கடவுளடா !
தாகம்
தீர்ந்த
பின்னே
மிகுதியில்
கால் களுவும்
உலகமடா !
- THUBEESH
|
| |
|
| |
பார்வை
பால் என்பதால்
எல்லாமே
பாலாகாது
ஏன்
கள்ளிமரத்திலும்
பால் சுரக்குமே
- THUBEESH
|
| |
|
| |
உயர்வு
கடன்
கொடு
ஏழை மக்கள்
முன்னேற
இனாமாக்
கொடுக்காதே
சோம்பேறி
ஆகிவிடுவான்
- THUBEESH
|
| |
|
| |
பணக்காரன்
பணக்காரர்
பணத்தைப்
பறித்து
ஏழைகளுக்குப்
பகிர
நினைப்பவன்
மடையன்
ஏழையாக
இருந்து
முன்னேறியவன்தானே
பணக்காரனும்
ஏன்
ஏழையும்
முயன்றால்
பணக்காரனாகலாமே
-
THUBEESH
|
| |
|
| |
சிரிப்பு
வாய் விட்டுச்
சிரி
ஆயுள்
கெட்டி
மற்றவரை
புறம்
சொல்லி
சிரிக்காதே
ஆயுளுக்கு
அரை
வாழ்வு
- THUBEESH
|
| |
|
| |
நட்பு
வாழ்க்கையில்
நட்பு இல்லாத
வாழ்க்கை
நரகத்திற்குச்
சமானம்
அதற்காக
தகுதி
அற்றவர்களிடம்
நட்பு வைக்காதே
தகுதியற்ற
நட்பைவிட
நட்பே இல்லாதவராக
வாழ்வது மேல்
- THUBEESH
|
| |
|
| |
கெட்ட நட்பு
தேன் கூட்டிலே
சுரக்கின்ற
நஞ்சு
- THUBEESH
|
| |
|
| |
மரத்த மனம்
போர்வைக்குள்த்
தூங்குகின்ற
நித்திரை
- THUBEESH
|
| |
|
| |
பேராசை
தங்கப்
பாத்திரத்தில்
பாலை வெறுக்கின்ற
பூனை
- THUBEESH
|
| |
|
| |
பிள்ளை
இரு கிளை
இடை வெடித்த
இளந்தளிர்
அரும்பு
- THUBEESH
|
| |
|
| |
வளி
காய் வளர
தான்கருகி
வழிவிடும்
வாசனைப்
பூக்கள்
- THUBEESH
|
| |
|
| |
உதவி செயயும் சந்தர்பத்தைப் பெற்றவன்
சந்தோசத்தில்
கண்ணால்
பாயும்
குருதியாறு
- THUBEESH
|
| |
|
| |
மனதார உதவுபவன்
ஆடை
கொடுக்காமல்
மானத்தைக்
காத்தவன்
- THUBEESH
|
| |
|
| |
தூர நோக்கு
அறுவடைக்கு
முன்
விதைத்த
நெல்மணி
- THUBEESH
|
| |
|
| |
நல்லவருக்கு நாக்கு ஒன்று
நெற்றியிலே
அறைந்த
ஆணி
- THUBEESH
|
| |
|
| |
தன்னம்பிக்கை
நிமிர்ந்து
நடக்கின்ற
கூனல்
- THUBEESH
|
| |
|
| |
விரும்பாத கல்யாணம்
கசக்கின்ற
சர்க்கரைப் பாகு
- THUBEESH
|
| |
|
| |
பொறுமைக்கும்
எல்லை உண்டு
பனி மலைக்குள்
தீப் பிளம்பு
- THUBEESH
|
| |
|
| |
உலோபியிடம்
எதிர் பார்கும் உதவி
பாடுபட்டும்
கிடைக்காத
பயன்
- THUBEESH
|
| |
|
| |
கிராமத்து
தலைவன்
படிக்காதவனிற்கு
கிடைத்த
நல்ல
பெறுபேறு
- THUBEESH
|
| |
|
| |
குடும்பத்தை
விட்டு வெளியேறிய பெண்
தரையிலே
தெறித்த
மீன் குஞ்சு
- THUBEESH
|
| |
|
| |
அளகான விலைமாது
முத்தில்லாத
மூடியுள்ள
சிற்பிக் கோது
- THUBEESH
|
| |
|
| |
தன்நலவாதி
செவியிருந்தும்
கேட்காத
நல்லவர்கள்
- THUBEESH
|
| |
|
| |
கேட்காமலே
உதவுகிறவன்
கொடி
படரத் தாங்கும்
மரக்கிளைகள்
- THUBEESH
|
| |
|
| |
தரம்
காலில் குத்துவதெல்லாம்
முள்ளென்று
எண்ணாதே
ஏன்
வைரமாகவும்
இருக்கலாமே
- THUBEESH
|
| |
|
| |
அன்னியம்
அன்னியம் என்பது
ஒவ்வொருவரின்
நிறத்திலேயோ
மொழியிலேயோ
ஐாதியிலேயோ
மதத்திலேயோ
இல்லை
அவரவர் மனத்தைப் பொறுத்ததே
- THUBEESH
|
| |
|
| |
அழுக்கு
உன்
உடலில்
உள்ள
அழுக்குக்
கழுவும்
நீ
உன் மனதுள்
உள்ள
அழுக்கை
எப்போ
கழுவப் போகிறாய்
-
THUBEESH
|
| |
|
| |
வாய்ப்பேச்சு
வாத்தியார்
வீட்டுப் பிள்ளை
வீதிச்
சண்டியன்
- THUBEESH
|
| |
|
| |
ஆக்கம்
நறுமணம் வீசும்
அழகான மலர்
இறந்த பின்தானே
சுவையான
பழத்தை புசிக்கலாம்
- THUBEESH
|
| |
|
| |
பாரபட்சம்
பாரத மாதா
மகள்
காவேரிக்கு
கர்நாடகாவோடு
மட்டுமல்ல
தமிழ் நாட்டுச்
சொந்தங்களோடும்
கட்டியணைத்துச்
சொந்தங் கொண்டாட
விருப்பம்
ஏன்
தடுக்கிறார்கள்
ஓ..
காவேரி என்பது
ஓர் பெண்ணின்
பெயர் என்பதாலோ
என்னவோ
- THUBEESH
|
| |
|
| |
விதவைக் கோலம்
அவளின்
வண்ண
நிற ஆடையை
அடித்துத்
தோய்துப்
பிழிந்து
வெள்ளாடை கட்டி
வெளியே விட்டுள்ளார்கள்
சாயம் போனது
அவளின்
ஆடை மட்டுமல்ல
அவளின் பல வர்ணக்
கனவுகளும்தான்
- THUBEESH
|